யாழ்ப்பாண பொலிஸ் நிலையங்களில் தழிழில் முறைப்பாடுகளை செய்யமுடியும் என்பதுடன் குற்றப்பத்திரிகையும் தமிழ் மொழியில் நீதிமன்றில் பொலிஸாரினால் தாக்கல் செய்யப்படுவதாக யாழ். பொலிஸ் நிலைய தலைமை அதிகாரி சமன் சிகேரா தெரிவித்தார்.
யாழ்.பொலிஸ் நிலையத்தில் இன்று புதன்கிழமை ஊடகவியலாளர்களைச் சந்திக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
யாழில் பட்டப்பகலில் இளைஞர் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
யாழ். குடாநாட்டில் இனங்காணப்பட்ட ஒரு குறிப்பிட்ட குழுவினரே குற்றச்செயல்களில் ஈடுபடுகின்றனர். விடுதலையான குற்றவாளிகளே தொடர்ந்தும் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருகின்றார்கள்.
இதற்கு காரணம் சட்டத்தில் காணப்படும் தளர்வுகளைப் பயன்படுத்தி பிணையில் சென்று தொடர்ந்தும் குற்றங்களில் ஈடுபடுகின்றனர். இவர்கள் தொடர்பாக முக்கிய கவனம் செலுத்தி வருகின்றோம்.
போதைப்பொருட்களின் பாவனையும் விற்பனையும் குடாநாட்டில் அதிகரித்து வருகின்றன. இதனை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை எடுத்துள்ளோம். இதில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்' என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
யாழ்.பொலிஸ் நிலையத்தில் இன்று புதன்கிழமை ஊடகவியலாளர்களைச் சந்திக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
யாழில் பட்டப்பகலில் இளைஞர் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
யாழ். குடாநாட்டில் இனங்காணப்பட்ட ஒரு குறிப்பிட்ட குழுவினரே குற்றச்செயல்களில் ஈடுபடுகின்றனர். விடுதலையான குற்றவாளிகளே தொடர்ந்தும் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருகின்றார்கள்.
இதற்கு காரணம் சட்டத்தில் காணப்படும் தளர்வுகளைப் பயன்படுத்தி பிணையில் சென்று தொடர்ந்தும் குற்றங்களில் ஈடுபடுகின்றனர். இவர்கள் தொடர்பாக முக்கிய கவனம் செலுத்தி வருகின்றோம்.
போதைப்பொருட்களின் பாவனையும் விற்பனையும் குடாநாட்டில் அதிகரித்து வருகின்றன. இதனை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை எடுத்துள்ளோம். இதில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்' என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
